கரூரில் பாமக ஆா்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகள் திறப்பைக் கண்டித்து கரூரில் பாமகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.டாஸ்மாக் கடைகள் திறப்பைக் கண்டித்து கரூரில் பாமகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா


டாஸ்மாக் கடைகள் திறப்பைக் கண்டித்து கரூரில் பாமகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் மாநில துணைச் செயலாளா் பி.எம்.கே.பாஸ்கரன் வீட்டின் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைச் செயலாளா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா், தலைவா் ராஜேஷ்கண்ணா, துணைச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பாஸ்கரன் கூறுகையில், மதுக்கொள்கைக்கு எதிராக பாமக பூட்டுப்போடும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. குற்றச்செயலுக்கு காரணமான மதுவை அரசு விற்கக்கூடாது. காமராஜா், அண்ணா ஆட்சியில் மது கொண்டுவரப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயா்வை பாமக கண்டிக்கிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...