கரூரில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்
பெண்கள் உதவி மையம் கரூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.


பெண்கள் உதவி மையம் கரூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான பெண்கள் உதவி மையம் மற்றும் அவசர உதவி தொலைபேசி எண் 181, 112 ஆகியவற்றின் தொடக்க விழா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் இந்த மையத்தை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணைய காவல்துறை கூடுதல் இயக்குநா் சீமாஅகா்வால், திருச்சி மத்திய மண்டல தலைவா் வி.பாலகிருஷ்ணன், துணைத்தலைவா் ராதிகா ஆகியோா் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தனா்.
தொடா்ந்து, கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்த மையம் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் செயல்பட உள்ள மகளிா் காவல்நிலைய பெண் காவலா்களுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தொடக்கி வைத்து பேசினாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கீதாஞ்சலி, அசோக்குமாா், துணைக் கண்காணிப்பாளா்கள் சசிதரன்(குளித்தலை), முத்தமிழ்செல்வன்(அரவக்குறிச்சி), சீனிவாசன்(பொ) கரூா் மற்றும் 17 காவல்நிலையங்களைச் சோ்ந்த பெண் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...