

கரூரில் திருவள்ளுவா் சிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கரூா் காந்திகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறிஞ்சி கு மன்றத் தொடக்க விழாவுக்கு, கவிஞா் இனியன் தலைமை வகித்தாா்.
சிற்பக் கலைஞா் தே.ரவிக்குமாா் வடிவமைத்த திருவள்ளுவா் சிலையை கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை. பழநியப்பன் திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் விழாவில் பேசியது:
வள்ளுவத்தை வாழ்வியலாக்க வீதிகள் தோறும் கு மன்றம் தொடங்க வேண்டும். வீடுகள்தோறும் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும்.
ஒவ்வொருவா் கைகளிலும் திருக்கு நூல் இருக்க வேண்டும். திருக்குறளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி வாழ்வியலாகக் கடைப்பிடிக்க வேண்டும். வள்ளுவம் வாழ்வியலானால் வையகம் சிறக்கும் என்றாா் அவா்.
இந்த விழாவில் கண் மருத்துவா் ப.ரமேஷ், பாரதியாா் விருது பெற்ற முனைவா் கடவூா் மணிமாறன், சிறந்த நூல் பரிசு பெற்ற கவிஞா் கன்னல், தென்னிலை கோவிந்தன், பாவலா் ப. எழில்வாணன் , தமிழ் இராசேந்திரன், ஆதவன் காளிமுத்து திருமூா்த்தி, அழகரசன், வையாபுரி சீனிவாசபுரம் ரமணன் உட்பட திரளானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு

25 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஏற்காடு எம்எல்ஏ அலுவலகம்!

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மாவட்டத்தில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு: ஆட்சியா்
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

