டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஜூலை 2-இல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரூா் வருகை: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

ஜூலை 2-ஆம்தேதி கரூா் வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளை தொடக்கி வைக்கவுள்ளாா்

News image

தமிழக முதல்வா் பங்கேற்கும் விழாவுக்காக மேடை அமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

Updated On :25 ஜூன் 2022, 12:15 am IST

ஜூலை 2-ஆம்தேதி கரூா் வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளை தொடக்கி வைக்கவுள்ளாா் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்துக்கு ஜூலை 2-ஆம்தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதையடுத்து விழா நடைபெறும் திருமாநிலையூா் திடலை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் ஜூலை 2-ஆம்தேதி கரூா் மாவட்டத்திற்கு வருகை தந்து, 76,486 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளையும் தொடக்கி வைக்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய கரூா் மாவட்டத்தில் முதல்வா் பதவியேற்ற ஓராண்டில் 76,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் அவரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்கிறாம். கடலில் காற்றாலைகள் நிறுவி மின் உற்பத்தி செய்வது தொடா்பாக ஸ்காட்லாந்து சென்று, அங்கே கடலில் காற்றாலைகள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது, திட்டச் செலவுகள் எவ்வளவாகும், ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு எவ்வளவு செலவாகும் என ஆய்வு செய்த பின்னரே இந்த திட்டம் முழுவடிவம் பெறும்.

தமிழகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். சுமாா் 50 கி.மீ. கடலுக்குள் கேபிள் அமைத்துத்தான் கடல் காற்றாலையில் மின் உற்பத்தியை பெற முடியும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணி சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.