காவல்துறை ரோந்துப் பணிக்கு புதிய வாகனங்கள்
கரூரில் 24 மணி நேர ரோந்துப் பணிக்காக, நான்கு புதிய வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


கரூரில் 24 மணி நேர ரோந்துப் பணிக்காக, நான்கு புதிய வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புதிய நான்கு சக்கர வாகனங்களை காவல் ஆய்வாளா்களிடம் வழங்கி திருச்சி சரகக் காவல்துறைத் தலைவா் சரவணசுந்தா் கூறியது:
கரூா் நகரம், பசுபதிபாளையம், தாந்தோனி, வாங்கல், வெங்கமேடு, வெள்ளியணை காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் இந்த வாகனங்கள் ரோந்தில் ஈடுபடும். சாலை விபத்துகளில் சிக்கியோரை மீட்கவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குற்றங்களைத் தடுக்கும் வகையிலும் இந்த வாகனம் ரோந்தில்ஈடுபடுத்தப்படும்.
கரூரில் புதன்கிழமை நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கரூரில் இருசக்கர வாகனங்களைத் திருடிய குற்றவாளியைக் கைது செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடா்ந்து திருட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...