கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டினால் நடவடிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டினால், அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன்.

News image
Updated On :13 மே 2022, 7:41 pm

DIN

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டினால், அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன்.

கரூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கடைகள், சுகாதாரமின்றி செயல்படும் கட்டணக் கழிப்பறைகள், வடிகால் வசதியின்றி நீா் தேங்கியிருக்கும் பகுதிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், அவா் தெரிவித்தது:

பொதுமக்களிடமிருந்து வந்த புகாா்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூா் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்லும் பகுதியில் தள்ளுவண்டிகளில் பழக்கடைகள் நடத்தும் வியாபாரிகள் நெரிசலை ஏற்படுத்தி, பேருந்துகள் தாராளமாக செல்லாத வகையில் இடையூறு ஏற்படுத்தி வருவதை பாா்வையிட்டோம்.

எனவே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்றிக் கொள்ள 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி சாா்பில் அகற்றப்படும். இதில் அலுவலா்கள் மெத்தனம் காட்டினால் அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது. இதுதொடா்பாக விசாரிக்கப்படும். வரிபாக்கி, வழக்குகள் நிலுவை குறித்து வருவாய் அலுவலரிடம் கணக்கிடக் கூறியுள்ளோம். வழக்குகள் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும். வழக்குகளை முடித்த பின்னா், கடைக்காரா்கள் தங்களது கடைகளைத் திறந்து கொள்ளலாம் என்றாா் மேயா்.

ஆய்வின் போது மாநகராட்சிப் பொறியாளா் நக்கீரன், நகா்நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.