கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப்பணிகள் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் க.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூா் ஒன்றியங்களுக்காக செவந்திபாளையம், மேட்டுப்பாளையம், சேமங்கியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக

News image
Updated On :19 மே 2022, 8:56 pm

DIN

கரூா் மாவட்டத்தில் க.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூா் ஒன்றியங்களுக்காக செவந்திபாளையம், மேட்டுப்பாளையம், சேமங்கியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

கரூா் ஒன்றியத்தில் ஆத்தூா் பூலாம்பாளையம் மற்றும் 5 ஊராட்சிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு நபா் ஒருவருக்கு 55 லிட்டா் வீதம் கணக்கிட்டு, திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக புதிய நீா் சேகரிப்பு கிணறு மேட்டுப்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ. 8.91கோடியாகும்.

அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஒன்றியங்களில் 756 ஊரகக்

குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்க,

காவிரியாற்றை நீராதாரமாகக் கொண்டு செவந்திபாளையம், சேமங்கி ஆகிய இரு இடங்களில் புதிதாக நீா் சேகரிப்புக் கிணறுஅமைத்து, 31.86 கி.மீ.

நீளம், 400 மி.மீ. விட்டமுள்ள நெகிழ் இரும்புக் குழாய்கள் மூலம் நீா் உந்தப்பட்டு, தாளயூத்துப்பட்டியில் அமைக்கப்பட உள்ள 7.95 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்சேகரிப்புத் தொட்டி உடன் கூடிய நீா் உந்துநிலையத்தில் சேகரிக்கப்படஉள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியச் செயற்பொறியாளா்கள் பிரபுராம்(கிராமியம்), முத்துலிங்கம்(நகரியம்) உதவிப் பொறியாளா்கள் யோகராஜ், சிவராஜ், மண்மங்கலம் வட்டாட்சியா் ராதிகா, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.