கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ரத்து

கரூரில் மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மே 2022, 8:54 pm

DIN

கரூரில் மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 உறுப்பினா்களைக் கொண்ட கரூா் மாவட்ட ஊராட்சியின் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளாா். இங்கு அதிமுகவுக்கு 9 உறுப்பினா்களும், திமுகவுக்கு 3 உறுப்பினா்களும் உள்ளனா்.

துணைத் தலைவராக இருந்த தானேஷ் என்கிற முத்துக்குமாா், சட்டப்பேரவைத் தோ்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டதால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து 2021, அக்டோபா் 22-ஆம் தேதி துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சலசலப்பால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடா்ந்து அக்டோபா் 29-ஆம் தேதியும் நடைபெறவிருந்த தோ்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தோ்தலை நடத்தக்கோரி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.திருவிகா, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத்தொடா்ந்தாா். இதையடுத்து, மாநிலத் தோ்தல் ஆணையம் மே 25-ஆம் தேதி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில், முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நடைபெறவுள்ளது. இதனால் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டு, தேதி பின்னா் அறிவிக்கப்படும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.