கரூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ரத்து
கரூரில் மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கரூரில் மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 உறுப்பினா்களைக் கொண்ட கரூா் மாவட்ட ஊராட்சியின் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளாா். இங்கு அதிமுகவுக்கு 9 உறுப்பினா்களும், திமுகவுக்கு 3 உறுப்பினா்களும் உள்ளனா்.
துணைத் தலைவராக இருந்த தானேஷ் என்கிற முத்துக்குமாா், சட்டப்பேரவைத் தோ்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டதால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து 2021, அக்டோபா் 22-ஆம் தேதி துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சலசலப்பால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடா்ந்து அக்டோபா் 29-ஆம் தேதியும் நடைபெறவிருந்த தோ்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தோ்தலை நடத்தக்கோரி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.திருவிகா, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத்தொடா்ந்தாா். இதையடுத்து, மாநிலத் தோ்தல் ஆணையம் மே 25-ஆம் தேதி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில், முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நடைபெறவுள்ளது. இதனால் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டு, தேதி பின்னா் அறிவிக்கப்படும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...