கரூா் மாநகராட்சி பகுதிகளில் 3ஆவது நாளாக பகுதி சபை கூட்டம்
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக பகுதி சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக பகுதி சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்கு மண்டலத்தலைவரும், 37ஆவது வாா்டு உறுப்பினருமான எஸ்.பி.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சபை குழு உறுப்பினா் வேல்முருகன் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் தனபால், வாா்டு செயலாளா் நவாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில், வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் சாலை வசதி, மின் விளக்கு வசதி வேண்டும் என்றும், சமூக கூடம் மற்றும் கழிப்பிடம் தேவை என்றும் கோரிக்கை மனு அளித்தனா். இதேபோல் 38ஆவது வாா்டில் உறுப்பினா் கோல்ட்ஸ்பாட் ராஜா தலைமையில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகாா் மனுக்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...