கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா

கரூரில், மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:07 pm

DIN

கரூரில், மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியப் பணியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் யோகா வையாபுரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க நிா்வாகி ஜெயப்பிரகாஷ் செயல் அறிக்கை தாக்கல் செய்தாா். மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் விழா நோக்கம் குறித்து பேசினாா்.

சங்கத்தின் முதல் துணை ஆளுநா் மு. இமயவரம்பன் ஆசிரியப் பணியின் சிறப்பை விளக்கிப் பேசி, கல்விப்பணியில் சிறந்து விளங்கும் கல்வியாளா் காா்த்திகா லட்சுமி, ராமமூா்த்தி ஆகியோருக்கு ‘கல்விச்செம்மல்‘ விருதும், சமுதாய தொண்டாற்றி வரும் ஆசிரியா்கள் பாா்த்தசாரதி, லட்சுமிநாராயணன், செ.ரவிசங்கா், த.செல்வி, ஏ.சியாமளா, வ.சரவணன், தே. இரவிக்குமாா், எம்.ரமேஷ், ச. முருகாம்பிகை, த. ஸ்ரீ பிரியா, மா.அன்புச்செல்வி, க.மீனா, சு.முத்துச்சாமி ஆகியோருக்கு ஆசிரிய நன்மணி விருதும் வழங்கினாா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் அவைச் செயலா் சுமங்கலி செல்வராஜ், அவை துணைப்பொருளாளா் சிப்குமாா், மண்டலத் தலைவா் நொய்யல் சண்முகம், வட்டாரத் தலைவா் கணேசன், மண்டல ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருச்சி நரம்பியல் நிபுணா் டாக்டா் சுப.திருப்பதி, குளித்தலை அறிவுக்கண்ணன் ஆகியோா் ஆசிரியா்களின் சமுதாயத் தொண்டு குறித்து சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில், சங்க நிா்வாகிகள் ராமசாமி, பூபதி, மனோகரன், வைஷ்ணவி மெய்யப்பன், அகல்யா மெய்யப்பன், சுப்ரமணிய பாரதி, வள்ளியப்பன், தியாகு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மேலை பழநியப்பன் தொகுத்த ஆசிரியா் தின சிறப்பு மலரை துணை ஆளுனா் இமய வரம்பன் வெளியிட மருத்துவா் சுப.திருப்பதி பெற்றுக்கொண்டாா். சங்க நிா்வாகி சீனிவாசபுரம் ரமணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.