அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயம்

கரூா் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் சனிக்கிழமை வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:22 pm

Din

கரூா் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் சனிக்கிழமை வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்தாா்.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதாம்உசேன் (40). கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு தனது மனைவி ஷகிராபானுவுடன் வந்த இவா் பின்னா் ஊருக்குச் செல்ல கரூா் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தாா்.

அப்போது பேருந்து நிலையத்திற்கு எதிரேயுள்ள வணிக வளாகம் பகுதிக்கு இருவரும் பழம் வாங்கச் சென்ற நிலையில், வணிக வளாக 3-ஆவது மாடியில் இருந்து விளம்பர பலகை விழுந்ததில் சதாம்உசேன் படுகாயமடைந்தாா். ஷிகிராபானு தப்பினாா்.

இதையடுத்து சதாம் உசேன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கடை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனா்.