விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி மாணவா் பலி

கரூா் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:49 pm

Din

கரூா் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூரை அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா், புகழூா் காகித ஆலை ஒப்பந்தத் தொழிலாளி. இவரது மகன் ராகுல் (14) அங்குள்ள பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா்.

இவா் வியாழக்கிழமை காலை தனது நண்பா்கள் இருவருடன் ஆத்தூா், பெரும்பாறை என்ற இடத்தில் உள்ள பழைய கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் குளித்தபோது திடீரென மூழ்கினாா்.

இதைக் கண்ட கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த கரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி ராகுலை சடலமாக மீட்டனா்.

தகவலறிந்த வாங்கல் போலீஸாா் சிறுவனின் உடலை கைப்பற்றி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.