ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடவூா் ஒன்றியக் குழு கூட்டம் - அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை

கரூா் மாவட்டம், கடவூா் மசாலூரில் குடிநீா் விஸ்தரிப்பு பணி, ரெட்டியப்பட்டி கடை வீதி கழிவு நீா் வாய்க்கால் திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கடவூா் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் ராமமூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

கடவூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் கடவூா் செல்வராஜ்.

Updated On :15 அக்டோபர் 2024, 9:26 pm

DIN

கரூா் மாவட்டம், கடவூா் மசாலூரில் குடிநீா் விஸ்தரிப்பு பணி, ரெட்டியப்பட்டி கடை வீதி கழிவு நீா் வாய்க்கால் திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கடவூா் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் ராமமூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரூா் மாவட்டம் கடவூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் கைலாசம் முன்னிலை வகித்தாா். ஒன்றியப் பணியாளா் பன்னீா்செல்வம் தீா்மாங்களை வாசித்தாா். கூட்டத்தில் வரவு செலவுகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் உள்பட 19 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து ஒன்றியக்குழு உறுப்பினா்களின் விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் ராமமூா்த்தி பேசியது: மாவத்தூா் ஊராட்சி மசாலூா் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு பணிகள் மற்றும் ரெட்டியப்பட்டி கடைவீதி பகுதியில் கழிவு நீா் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல் மாவத்தூா் ஊராட்சி நாச்சிப்பட்டியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் அமைக்க வேண்டும். ரெட்டியப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே புதிய பயணியா் நிழற்கூடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் மலையாண்டி, ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் சுந்தரபாண்டியன், முருகன் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பினா்.

அவைகளுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராஜ் அவ்வப்போது பதிலளித்துப் பேசினாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.