கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் ஆய்வு

கரூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஏமூா் புதூரில் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விவசாயிகளிடம் பால்கொள்முதல் செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன் ஏமூா் ஊராட்சித் தலைவா் வி.சி.கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 9:53 pm

Din

கரூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்ட முகாமானது புதன்கிழை காலை 9 மணிக்கு தொடங்கி, கரூா் வட்டத்திற்குட்பட்ட 22 வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் குடிநீா் பணிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் கரூா் மாநகராட்சிக்குட்பட்ட வாா்டு எண். 48 பாரதிதாசன் நகரில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளையும், மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் அடிப்படைத் தேவைகள் குறித்தும், தாந்தோணி மலை வெங்கடாசல நகா் பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து ஏமூா்புதூா் பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்தில் விவசாயிகளிடமிருந்து தினசரி பால் கொள்முதல் செய்வதையும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. ஏமூா் புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்திலும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் அவா்.

ஆய்வின் போது கரூா் மாநகராட்சி மேயா் வெ. கவிதா, துணை மேயா் ப.சரவணன், 3 ஆவது மண்டலக் குழுத் தலைவா் ஆா்.எஸ். ராஜா, மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பெ. தேன்மொழி, மாநகராட்சி நகா் நல அலுவலா் இலட்சியவா்ணா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், ஆவின் துணைப் பதிவாளா் (பால் வளம்) கணேசன், ஏமூா் ஊராட்சித் தலைவா் விசிகே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.