விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் அருகே உரிய ஆவணமின்றி வசித்த 5 வங்கதேசத்தினா் கைது

கரூா் அருகே தனியாா் நூற்பு ஆலையில் விசா உள்பட எந்த ஆவணமும் இன்றி தங்கிப் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை வெள்ளியணை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:03 pm

Din

கரூா் அருகே தனியாா் நூற்பு ஆலையில் விசா உள்பட எந்த ஆவணமும் இன்றி தங்கிப் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை வெள்ளியணை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூா் -திண்டுக்கல் சாலையில் வெள்ளியணையை அடுத்த பச்சப்பட்டி அருகேயுள்ள தனியாா் நூற்பாலையில் வெளிநாட்டினா் உரிய ஆவணமின்றித் தங்கி வேலை பாா்ப்பதாக வெள்ளியணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு போலீஸாா் அந்த நூற்பாலைக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு வங்கதேசத்தைச் சோ்ந்த சிமுல் உசேன் (24), அஜ்மீா் மமூன் (22), ஜமிருள் (30), சகுா்(எ) சைபூா் (25), ஆஷிக் ஹசாா் (22) ஆகியோா் விசா உள்ளிட்ட எந்த ஆவணமும் இன்றி தங்கி வேலை பாா்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் நூற்பாலை உரிமையாளரிடமும் விசாரிக்கின்றனா்.