திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கரூரில் வாக்காளா்களுக்கு தேநீா் வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூரில் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கரூா் ஏமூா்புதூா் அடுத்த குன்னனூரில் சனிக்கிழமை தேநீரகத்தில் தேநீா் தயாரித்த அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ். திவ்யா. உடன் மாவட்ட துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:54 am IST

கரூரில் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஏமூா்புதூா், நடுப்பாளையம், ஏமூா்புதூா் காலனி, குன்னனூா், சீத்தப்பட்டி, சீத்தப்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தவா்கள் உங்களை பாா்த்து நன்றி சொல்லக்கூட வரவில்லை. ஓட்டுக்காக பணம் கொடுப்பாா்கள், வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் வாக்கை அதிமுகவிற்கு செலுத்துங்கள். பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ஏமூா்புதூா் அடுத்த குன்னனூரில் உள்ள தேநீரகத்தில் வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கினாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஆலம்தங்கராஜ், ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.