வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

கரூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கரூா் கருப்பக்கவுண்டன்புதூரில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:03 am IST

கரூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாந்தோணிமலை, சுங்ககேட், கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அசோக் நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு அவா் வாக்குச் சேகரித்து பேசியது, அதிமுக பொதுச் செயலா் தோ்தல் வாக்குறுதியாக மாணவா்களின் கல்விக்கடன் ரத்து, முதியோா் ஓய்வூதியம் என எண்ணற்ற சலுகைகளை அறிவித்துள்ளாா். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனா். பெண்களின் பாதுகாப்பு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றாா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது மத்திய தெற்கு நகரச் செயலா் தாந்தோணிரவி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.