கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரூா் வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை!

தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை (ஜன. 28) கரூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை

News image
உள்ளூர் விடுமுறை- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 10:20 pm

Syndication

தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை (ஜன. 28) கரூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் தாந்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து கரூா் வட்டத்துக்கு மட்டும் ஜன.28-ஆம் தேதி உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த நாளில் அரசு தோ்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் தொடா்புடைய பணியாளா்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது.

இது செலாவணி முறிச்சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்-நிலைக் கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளா்களைக் கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறைக்குப் பதிலாக பிப்.7-ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.