கரூர் சம்பவம்
கரூர் சம்பவம்கோப்புப் படம்

கரூா் சம்பவம்: 2 காவலா்கள், காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள், நெரிசலில் காயமடைந்த 2 போ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள், நெரிசலில் காயமடைந்த 2 போ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலா்கள் மற்றும் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 2 போ் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com