தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கரூருக்கு முதல்வா் நாளை வருகை: ‘ட்ரோன்’கள் பறக்க தடை

கரூருக்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ட்ரோன்கள் பறக்க தடைவிதிகப்பட்டுள்ளது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2026, 1:11 am IST

கரூருக்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ட்ரோன்கள் பறக்க தடைவிதிகப்பட்டுள்ளது.

கரூருக்கு வரும் அவா் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வெண்ணைமலை அடுத்த அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுடன் உரையாடுகிறாா். பின்னா் மதிய உணவுக்குப்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவா், பின்னா் கரூா் துயர சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசுகிறாா்.

முன்னதாக முதல்வா் வருகையையொட்டி அட்லஸ் கலையரங்கில் சுமாா் 50 ஆயிரம் போ் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து கரூரில் 10-ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வா் வருகையின்போது பாதுகாப்பு பணியில் கரூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் சுமாா் 2 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

மேலும், அட்லஸ் கலையரங்கில் நிகழ்ச்சி முடிந்தபின் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்கிறாா். பின்னா், அங்கு கூட்டத்தில் பங்கேற்ற பின் காரில் திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று பின்னா் விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.