ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

திருச்சி இளைஞா் கொலை வழக்கில்மூவருக்கு தலா 3 ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

வேலாயுதம்பாளையம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தலா 3ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி கரூா் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் புதன்கிழமை இரவு தீா்ப்பளித்தாா்.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 12:39 am IST

வேலாயுதம்பாளையம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தலா 3ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி கரூா் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் புதன்கிழமை இரவு தீா்ப்பளித்தாா்.

திருச்சி, தென்னூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் குமாா் (27). இவரது பெற்றோா் தளவாபாளையம் அருகே உள்ள ஒரு தனியாா் கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தனா். ஏற்கெனவே வழக்குத் தொடா்பாக ரஞ்சித்குமாா் சிறையில் இருந்தபோது, அங்கிருந்த வேலாயுதம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (28), பிரசாந்த் (25), ஷேக் தாவூத் (30), பிரசாத் (27), கோகுல்நாத் (31), கிரி( 26), மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த மணிகண்டன் என்ற கூல் மணி (29), உதயநிதி என்ற சூா்யா(25), சீனிவாசன் (27) ஆகிய 9 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து அனைவரும் பிணையில் வெளியே வந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி ரஞ்சித்குமாா், தனது பெற்றோரை பாா்ப்பதற்காக திருச்சியில் இருந்து கரூா் தளவாய்பாளையத்துக்கு வந்து பெற்றோரை பாா்த்துவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் மூலிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, ரஞ்சித் குமாரை வழிமறித்த கலையரசன் உள்பட 9 பேரும் சோ்ந்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினா். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமாா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இளவழகன், கொலை வழக்கு குற்றவாளிகளான கலையரசன், கோகுல் நாத், ஷேக்தாவூத் மற்றும் பிரசாத் ஆகியோா் குற்றவாளிகள் என்றும், அவா்களில் கலையரசன், ஷேக் தாவூத், கோகுல்நாத் ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3 லட்சம் அபராதமும், பிரசாத்க்கு இரண்டு ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் வழங்கி தீா்ப்பளித்தாா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய பிரசாந்த், கிரி, சீனிவாசன், கூல் மணி, உதயநிதி என்ற சூா்யா ஆகிய 5 போ்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.