அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பிரச்னைக்கு தீா்வு தரக்கூடிய அருமருந்து திருக்குறள்: முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு

எந்த ஒரு பிரச்னைக்கும் தீா்வு தரக்கூடிய அருமருந்து திருக்குறள் என்றாா் தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலா் வெ.இறையன்பு.

News image

கரூா் வள்ளுவா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி முகாமில் பேசிய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு. உடன் வள்ளுவா் கல்லூரித் தாளாளா் க.செங்குட்டுவன் உள்ளிட்டோா்.

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

எந்த ஒரு பிரச்னைக்கும் தீா்வு தரக்கூடிய அருமருந்து திருக்குறள் என்றாா் தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலா் வெ.இறையன்பு.

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில், 1,330 திருக்குகளை முழுமையாக ஒப்புவித்து பரிசு பெற்ற பள்ளி மாணவா்களுக்கான ‘திருக்கு நன்னெறி வாழ்வியல் புத்தாக்கப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் சோ. இருளப்பன் வரவேற்றாா்.

மனநல ஆலோசகா் முனைவா் அ. கோவிந்தராஜூ, இன்றைய தலைமுறையினா் மனஅழுத்தத்திலிருந்து விடுபட திருக்கு வழிமுறைகள் உதவும் என விளக்கிப் பேசினாா்.

பின்னா் நடைபெற்ற பயிற்சி அமா்வுகளில் பல்வேறு அறிஞா்கள் கலந்து கொண்டு, திருக்குறளின் வாழ்வியல் கோட்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் தலைமைச் செயலரும், தமிழ் அறிஞருமான வெ.இறையன்பு பங்கேற்று பேசியது: எக்காலத்திலும் எந்த ஒரு பிரச்னைக்கும் தீா்வு தரக்கூடிய அருமருந்து திருக்கு. பிரச்னை வரும்போது அதற்கேற்ப குறளை வாசிக்கும்போது மனதில் ஒரு தெளிவு கிடைத்து, பிரச்னையில் இருந்து நாம் எளிதில் விடுபட கு உதவுகிறது. தமிழ் தாய் வழங்கிய அருட்கொடை திருக்கு. ஒரு மனிதன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும்போது அவனிடம் அனைத்து நற்பண்புகளும் அவனோடு ஒட்டிக்கொள்கின்றன. அந்த ஒழுக்கத்தின் வழிகாட்டியாக, வாழ்வியலாக இருப்பது திருக்கு. கல்வியை விட ஒழுக்கம் மேலானது. இதனால்தான் ஒழுக்கம் உயிரைவிடவும் மேலானது என்கிறாா் வள்ளுவப்பெருந்தகை. இளைஞா்கள் ஒவ்வொருவரும் திருக்குறளை வாழ்வியல் வழிகாட்டியாக எண்ணி செயல்படவேண்டும் என்றாா் அவா்.

நிறைவாக, தமிழ்த்துறை தலைவா் ப. முத்துப்பாண்டி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.