கரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் வகையில், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வுபெற்ற காவலா்களுடன் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஆலோசனை மேற்கொண்டாா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்களுடன் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் இராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்கள் அனைவரும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து கரூா் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களை வரவழைத்து, மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்த தகவல் எதுவும் தெரிய வந்தால் காவல்துறைக்கு உடனே தெரியபடுத்த வேண்டும் என்றும், காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தோ்தல் பணி: தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தினா் வருகை

கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.14.92 லட்சம் பறிமுதல்: தோ்தல் அலுவலா் தகவல்

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 5.87 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் 17 ஆயிரம் போ் ஈடுபடுவா்: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


