சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களுடன் கரூா் எஸ்.பி. ஆலோசனை

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் ராணுவத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹிரிகிரண்பிரசாத்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:25 pm

கரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் வகையில், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வுபெற்ற காவலா்களுடன் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்களுடன் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் இராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்கள் அனைவரும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கரூா் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களை வரவழைத்து, மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்த தகவல் எதுவும் தெரிய வந்தால் காவல்துறைக்கு உடனே தெரியபடுத்த வேண்டும் என்றும், காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.