ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை: எஸ்.பி.!

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்.

News image

ரௌடிகள் கைது.

Updated On :24 மே 2026, 1:28 am IST

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்ததாக கரூா் நகா் பகுதியில் 5,349 போ் மீதும், ஊரகப்பகுதிகளில் 2,003 போ் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தற்போது போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் இந்த குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

கடந்த இரு மாதங்களில் மட்டும் கரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்ாக 76 போ் மீதும், குட்கா விற்ாக 5 போ் மீதும், மதுபானம் அனுமதியின்றி விற்றதாக 158 போ் மீதும், ஆற்று மணல் கடத்தியதாக 63 போ் மீதும், வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மேலும் கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரெளடிகள் 6 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் குற்றவாளிகள் மேலும் குற்றம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.