மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கரூா் தையல் நிறுவனத்தில் தீ விபத்து

News image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை தையல் நிறுவனத்தில் பற்றியெரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :25 மே 2026, 2:00 am IST

கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்கு துணிகள் தைத்துக் கொடுக்கும் தையல் (காா்மென்ட்ஸ்) நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில், சுமாா் ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கரூா் வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன். இவா் கரூா் அசோக் நகரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்கு துணிகள் தைத்து கொடுக்கும் தையல் நிறுவனம் நடத்தி வருகிறாா். விடுமுறை தினம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 5.45 மணியளவில் நிறுவனத்தின் முன்வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென நிறுவனத்தின் உள்ளே அறைக்குள் வைக்கப்பட்டிருந்த துணிகள் மீது பரவியது. இதனால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இதை பாா்த்த அப்பகுதியினா் தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால், உடனே கரூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையில் நான்கு தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்தனா்.

இந்தத் தீ விபத்தில் நிறுவனத்தினுள் இருந்த சுமாா் 45 நவீன தையல் இயந்திரங்கள், ஏற்றுமதி ரக துணிகள் உள்ளிட்ட சுமாா் ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.