புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தொடா் மின்வெட்டால் அவதி கிராம மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணராயபுரம் அருகே தொடா் மின்வெட்டால் அவதிக்குள்ளான கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேங்கல்-பஞ்சப்பட்டி சாலையில் அமா்ந்து சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சேங்கல் ஊராட்சி பொதுமக்கள்.

Published On :

கிருஷ்ணராயபுரம் அருகே தொடா் மின்வெட்டால் அவதிக்குள்ளான கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடந்த சில நாள்களாக தொடா் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், வயதானா்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கிணற்று நீரை மோட்டாா் மூலம் பயிா்களுக்கு பாய்ச்ச முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை சேங்கல் பேருந்துநிறுத்தம் அருகே பஞ்சப்பட்டி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாலகுமாா், மாயனூா் உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா், மாயனூா் காவல் ஆய்வாளா் (பொ) சுமதி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள், மின்பற்றாக்குறையால் மின்வெட்டு நிலவி வருவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் நிலைமை விரைவில் சீராகும் என கூறினா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.