எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மானியத்தில் சொட்டுநீர்,  தெளிப்பு நீர்பாசனம் அமைக்கலாம்

பெரம்பலூர் வட்டாரத்தில் மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:25 am IST

பெரம்பலூர் வட்டாரத்தில் மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பெரம்பலூர் வட்டாரத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், மானியத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத் தூவான் ஆகியவற்றை அரசு மானிய விலையில் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. 
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தங்களுடைய நில உடமை ஆவணங்களான சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை, மண் மற்றும் தண்ணீர் ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் பெரம்பலூரில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.