பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், முறையே 9, 11, 14, 17 வயதுக்குள்பட்டோருக்கு 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி நடுவர்களாக உடல்கல்வி ஆசிரியர்கள் அலெக்சாண்டர், ஸ்டான்லி, கோபி, விஜயபாஸ்கர், அழகுதுரை, கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுக் கோப்பைகளும், பெரம்பலூர் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.