மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மே 2 முதல் கோடை கால சிறப்பு பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பில், கோடை கால கலைப் பயிற்சி முகாம் மே 2 ஆம் தேதி தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:36 am

DIN

பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பில், கோடை கால கலைப் பயிற்சி முகாம் மே 2 ஆம் தேதி தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார் திருச்சி மண்டல கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் குணசேகரன்.  
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஜவகர் சிறுவர் மன்றம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப் பிரிவுகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  
இந்நிலையில், கலை பண்பாட்டு துறை சார்பில், கலைத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 2 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில், நாள்தோறும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப் பிரிவுகளில் 5 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மே 2 ஆம் தேதிக்குள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.