பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.
வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர், அய்யனார்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம், சித்தளி, பேரளி காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளன. இவை குடிநீருக்காக, உணவுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு மற்றும் சாலைகளைக் கடந்து செல்கின்றன. அப்போது, வெறிநாய்கள் கடித்தும், வாகனங்கள் மோதியும் உயிரிழப்பது தொடர்கிறது.
இந்நிலையில், பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றரை வயதுள்ள புள்ளிமான் ஒன்று, பெரம்பலூர்- துறையூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. தகவலறிந்த வனத் துறையினர் அங்குசென்று இறந்து கிடந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, வனப்பகுதியில் புதைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன ரேடாா் கருவிகள்
பரஸ்பர தாக்குதல் கூடாது: இஸ்ரேல், ஈரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

12-ஆம் வகுப்பு விடைத்தாள் கொள்முதல் நடைமுறைகள்: ஆா்டிஐ-யின்கீழ் வெளியிட சிபிஎஸ்இ-க்கு உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


