அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

முதல்நிலை அலுவலர்களுடன் வாரம்தோறும் ஆய்வுக்கூட்டம்

அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக வாரந்தோறும், முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.

Updated On :21 மே 2018, 9:22 pm

அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக வாரந்தோறும், முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
அரசுத் திட்டங்கள், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை தோறும், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.
அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும். கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், அதை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் சு. தேவநாதன் உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதன்மை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.