கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதி (21). இவா் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தைக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, பாரதியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து அவரை குற்றவியல் நடுவா் மன்றத்தில் காவல்துறையினா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.