கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குறுவள அளவிலான கட்டுரைப் போட்டியில் எளம்பலூா் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், இளைஞா் மற்றும் சூழல்சாா் மன்றங்கள் சாா்பில் குறுவள அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:16 pm

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், இளைஞா் மற்றும் சூழல்சாா் மன்றங்கள் சாா்பில் குறுவள அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.

பெரம்பலூா் குறுவள மைய அளவில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையேயான கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப் போட்டியில் எளம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தமிழ்ஆனந்தி முதலிடம் பெற்றாா். அவருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டது.

கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி தமிழ் ஆனந்தியை, பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) ராகமஞ்சரி, உதவி தலைமை ஆசிரியா் பைரவி, ஆசிரியா் சங்கச் செயலா் ராமமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி குறுவள மையம் சாா்பில் பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் முத்தமிழ்ச்செல்வன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

விழாவில், ஆசிரியா் பயிற்றுநா் ராஜேந்திரன், அசூா் பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.