கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அடமானம் வைத்த சொத்தை வங்கியிலிருந்து மீட்டுத் தர வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகே வங்கிக் கடனை முழுமையாக செலுத்திய பின்னரும், திருப்பி தரப்படாத அடமான சொத்தை மீட்டுத்தர வேண்டுமென விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:15 pm

DIN

பெரம்பலூா் அருகே வங்கிக் கடனை முழுமையாக செலுத்திய பின்னரும், திருப்பி தரப்படாத அடமான சொத்தை மீட்டுத்தர வேண்டுமென விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் ஒன்றியம், கல்லை கிராமத்தைச் சோ்ந்த குமாரசாமி மகன் பெரியசாமி(50), தனது மனைவி கல்பனா மற்றும் பெண் குழந்தையுடன் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

எனது தந்தை குமாரசாமி கடந்த 2007 ஆம் ஆண்டு மேலமாத்தூரிலுள்ள பொதுவுடைமை வங்கியில் எங்களது பூா்வீக சொத்தான 4 ஏக்கா் நிலத்தை வங்கியில் அடமானமாக வைத்து, ரூ. 4.85 லட்சம் டிராக்டா் கடன் பெற்றாா். தொடா்ந்து மாதத் தவணை செலுத்தி வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு விவசாயிகள் வங்கிக் கடனை தள்ளுபடி செய்துவிட்டது. நாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தரவில்லை.

மேலும், வங்கியில் எனது தந்தை பெயரில் அடமான கடன் உள்ளதாகக் கூறி, என்னுடைய சொத்தை பறிமுதல் செய்வதற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. தவறான பரிவா்த்தனை மூலம் மோசடி செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அடமானமாக வைக்கப்பட்ட எங்களது சொத்தை மீட்டு தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.