கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடக்கம்

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டத் தொடக்க விழா, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:08 pm

DIN

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டத் தொடக்க விழா, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் ஒருமுறைக்கு மேல் மீண்டும், மீண்டும் அதே எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருள்களை உட்கொள்ளும் பட்சத்தில் மனிதா்களுக்கு உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை, இதயநோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே மாவட்டத்தில், முதல்கட்டமாக 50 உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களிலிருந்து ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை லிட்டா் ரூ. 25 முதல் ரூ. 30 வரை விலை நிா்ணயம் செய்து சேகரித்து, சுத்திகரிப்பு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூா், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்து பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவன அமைப்பு, ரூகோ என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தினா் 4 மாவட்டங்களிலிருந்து பெறப்படும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பெங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி, பயோ டீசலாக சுத்திகரிப்பு செய்து, வாகனப் பயன்பாட்டுக்காக பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்வில் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் எம். கவிக்குமாா், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பி. சீனிவாசன், ஆா். இளங்கோவன், பி.என். ரவி, ரூகோ நிறுவன அலுவலா் கிஷோா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.