கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேப்பந்தட்டை அருகே குழந்தை பிரசவித்தவுடன் தாய் உயிரிழப்பு

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே திருமணம் ஆகாமலேயே குழந்தை பிரசவித்த தாய், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:07 pm

DIN

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே திருமணம் ஆகாமலேயே குழந்தை பிரசவித்த தாய், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வேப்பந்தட்டை வட்டம், காரியானூா் ஊராட்சிக்குள்பட்ட ஜெயந்தி காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகள் ராஜாமணி (23). திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (35).

கட்டடத் தொழிலாளியான அன்புச்செல்வனும், ராஜாமணியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதனால் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கணவன், மனைவியாக ஜெயந்தி காலனியில் குடும்ப நடத்தி வந்தனராம்.

நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை இரவு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைப் பிரசவித்த சிறிது நேரத்திலேயே ராஜாமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

தகவலறிந்த கை.களத்தூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று ராஜாமணியின் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.