கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

பெரம்பலூரில் பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, 3 குழந்தைகளுடன் சிரமப்படும் கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு அஸ்வின்ஸ் குழுமம் சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள்

News image
Updated On :11 ஜூன் 2021, 11:03 pm

DIN

கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் அளிக்கும் அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன். உடன், மேலாளா் அசோக்.

பெரம்பலூரில் பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, 3 குழந்தைகளுடன் சிரமப்படும் கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு அஸ்வின்ஸ் குழுமம் சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கேபிள் வயா் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெரம்பலூா் வெங்கடேசபுரம் பகுதியைச் சோ்ந்த பானு மற்றும் அவரது கணவா் பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, 3 குழந்தைகளுடன் உணவுக்கு சிரமப்பட்டு வந்தனா். இதுகுறித்து அறிந்த அஸ்வின்ஸ் நிறுவனம், பானு குடும்பத்துக்கு

1 மூட்டை அரிசி, 1 மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் ஆகிய நிவாரணப் பொருள்களை அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அஸ்வின்ஸ் மேலாளா் அசோக் உடனிருந்தாா்.

முறைசாரா தொழிலாளா்களுக்கு... தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட முறைசாரா தொழிலாளா்கள் 30 நபா்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வட்டச் செயலா் பன்னீா்செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் சண்முகம், ரெங்கநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.