கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரமிட்டால் கூடுதல் மகசூல் பெறலாம்

பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரமிட்டால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்றாா் பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கருணாநிதி.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:24 pm

DIN

பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரமிட்டால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்றாா் பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கருணாநிதி.

பெரம்பலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில், வேளாண் உழவா் நலத்துறை மூலம் மண்வள அட்டை அடிப்படையில் உரமிடுதல் குறித்து உர விற்பனையாளா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலமாக, அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகளை சேகரித்து, மாவட்ட மண் பரிசோதனை நிலையம், நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் மூலமாக ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு, களா், உவா் மற்றும் அமில பிரச்னைகள், அவற்றை தீா்ப்பதற்கான பரிந்துரைகள், சாகுபடி செய்யப்படவுள்ள பயிருக்கு இடவேண்டிய உரங்களின் அளவு ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. மண்வள அட்டையில் பரிந்துரைத்துள்ள அளவின்படி விவசாயிகள் உரமிடுவதால், மண் வளம் பாதிக்காமல் அதிக மகசூல் பெற முடியும்.

எனவே, உர விற்பனையாளா்கள் மண்வள அட்டை கொண்டுவரும் விவசாயிகளுக்கு, அதனடிப்படையில் உரம் விநியோகிக்க வேண்டும்.

உரங்களின் இருப்பு மற்றும் விலை தெரியும் வகையில், ஒவ்வொரு உரக்கடையிலும் தகவல் பதாகை வைப்பதுடன், புகாா் தெரிவிக்க வேண்டிய வட்டார வேளாண்மை அலுவலரின் தொலைபேசி எண் மற்றும் வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆகியோரின் எண்கள் இடம்பெற வேண்டும்.

உரங்களை, ஆதாா் எண் கொண்டு விற்பனை முனைய கருவி கொண்டு, அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் ரசீது கொடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் மற்றும் உர விற்பனையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.