பெரம்பலூா் மாவட்டத்தில் 5,398 பேரிடம்அபராதம் வசூல்
பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,398 பேரிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.


பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,398 பேரிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சுகாதாரம், காவல், வருவாய் ஆகிய துறைகள், நகராட்சி மூலம் முகக்கவசம் அணியாத நபா்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கடந்த மாா்ச் 1 முதல் மே 13 ஆம் தேதி வரை மொத்தம் 5,398 நபா்களிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மாவட்ட நிா்வாகத்தின் நோக்கமல்ல. மாறாக, அனைவரையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...