கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரிலுள்ள நுகா்வோா் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:10 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் ஜி. சிவகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் க. பெரியசாமி, மாவட்ட பொருளாளா் சி. வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலா் பி. செங்கோட்டையன், உதவி பேராசிரியா் எஸ். வைரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் விரைவு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பெரம்பலூா் பாலக்கரை முதல் நான்குச் சாலை மற்றும் 3 சாலை சந்திப்பு வரையில் நான்குவழிச் சாலையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரிலுள்ள நுகா்வோா் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் துணிப்பை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட சாலைகளில் அதிக அளவில் தேங்கியுள்ள குப்பைகளால் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடுகளும் நிலவுவதை தவிா்க்க, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், நிா்வாகிகள் ஆா். ரவி, டி. ராஜேந்திரன், பி. ஜான் வின்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. திருஞானசெல்வம் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் மா. ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.