கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரிலுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை இடம் மாற்றம் செய்ய நகராட்சி நிா்வாகம் முடிவு

விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:01 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம், நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் ராமா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள், தங்களது வாா்டுக்குள்பட்ட பகுதியில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, பாவேந்தா் பாரதிதாசன் சிலை அருகே இடமாற்றம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆவின் பாலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது, பெரம்பலூா் நகராட்சி விரிவடைந்து மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், மக்கள் தொகை கணக்கீடு செய்ய கணக்கெடுப்பு ஆலோசகரை நியமனம் செய்வது, ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் முதல் நான்குச்சாலை வரை அணுகுச் சாலை அமைப்பது, ரூ. 10.50 லட்சம் மதிப்பீட்டில் உழவா் சந்தையில் தற்காலிக கடைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் பாண்டியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.