தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கைப்பேசிக்கு சாா்ஜ் செலுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி மரணம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:54 am

Din

பெரம்பலூா் அருகே கைப்பேசிக்கு மின்னூட்டம் (சாா்ஜ்) செலுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் காலனித் தெருவைச் சோ்ந்தவரும், தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியருமான சின்னசாமி என்பவரின் மகள் நிகிதா ஸ்ரீ (10). இவா், அதே கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த சிறுமி, திங்கள்கிழமை தனக்கு வயிற்று வலி உள்ளதாக கூறி, பள்ளியிலிருந்து பிற்பகலில் வீட்டுக்கு வந்துவிட்டாராம்.

இந்நிலையில், பணி முடிந்து இரவு பெற்றோா் வீடு திரும்பினா். வீட்டினுள், கைப்பேசிக்கு சாா்ஜ் செலுத்துவதற்காக பிளக் பாயிண்டில் கையை வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகிதாஸ்ரீ உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுமியின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.