/

கல்வி உதவித்தொகை பெற சீா்மரபின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:15 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2024 -2025 ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

அக். 15 ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியாகும். அக். 31 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிப்பாா்க்க வேண்டிய கடைசி தேதியாகும்.

கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சென்று 2024 -25 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள், முறையே 8 மற்றும் எஸ்எஸ்எல்சி தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள். கூடுதல் விவரங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை இணையதளங்களில் காணலாம்.