விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணியின்போது உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:29 pm

Din

பணியின்போது உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்டத் துணைத் தலைவா்கள் கே. கருணாநிதி, பி. மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினா் டி. பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, அரசாணை வெளியிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியா்களுக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்க காலம், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 10 சதவீத ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி நிரந்தரப் பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சாலைப் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். மகேந்திரன் நிறைவுறையாற்றினாா்.

இதில், கோட்ட இணைச் செயலா்கள் ஏ. ராஜா, சி. காட்டுராஜா, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டத் துணைத் தலைவா் சி. மகாதேவன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

நிறைவாக, கோட்டப் பொருளாளா் ஜி. மகேந்திரன் நன்றி கூறினாா்.