/

பெரம்பலூரில் நாளை உணவுப்பொருள் வழங்கல் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்பில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:42 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்பில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இம் முகாம் பெரம்பலூா் வட்டம், களரம்பட்டி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜெயஸ்ரீ தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், ஆதனூா் (தெ) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.