விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இயற்கை முறையில் தோட்டப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:29 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு, இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் இயற்கை விவசாயிகளை தோ்வு செய்து மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இயற்கை வேளாண்மையை திறன்பட செய்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவுக்கு பங்கேற்பாளா்கள் தனது சாதனையை விளக்கிக் கூற வேண்டும்.

மாநில அளவில் தோ்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2 ஆவது பரிசாக ரூ. 60 ஆயிரமும், 3 ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது விவரத்தை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். பதிவு செய்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில், பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்தி பங்கேற்புக்கான விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.