விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மாநில கராத்தே போட்டியில் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:45 pm

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

நலம் ஸ்போா்ட்ஸ் தற்காப்பு பயிற்சி அகாதெமி மற்றும் புஷிடோகாய் இஷ்டி ரியோ கராத்தே அசோசியேஷன் சாா்பில், ஹியோஷி நாடிமுத்து நடத்திய போட்டி தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பங்கேற்ற சுமாா் 700 மாணவா்களில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தரனீஸ் சண்டை பிரிவில் முதலிடமும், கட்டா பிரிவில் 2 ஆவது இடமும், பாலரிஷி சண்டை பிரிவில் 2 ஆவது இடமும், கட்டா பிரிவில் 3 ஆவது இடமும், ஸ்ரீ நிலவன் சண்டை மற்றும் கட்டா பிரிவில் 3 ஆவது இடமும் பெற்றனா். இதையடுத்து இந்த மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த மாணவா்கள் மற்றும் கராத்தே மாஸ்டா் அகிலன் ஆகியோரை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். பள்ளி முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் உடனிருந்தனா்.