ஜெகதீசன்
ஜெகதீசன்

பெரம்பலூா் காவல் ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளா் வெ. ஜெகதீசன் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
Published on

பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளா் வெ. ஜெகதீசன் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் மகன் ஜெகதீசன் (54). பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் பெரம்பலூா் நான்கு சாலை செல்லும் வழியில் விவேகானந்தா நகரில் உள்ள குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜெகதீசன் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது ஜெகதீசன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com