பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்காக பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறையில் தோ்தல் விளம்பரங்கள், சமூக ஊடகப் பதிவுகள் முறையாக கண்காணிக்கப்படுகிா எனவும், ஊடகச் சான்றிதழ் விநியோகம் போன்றவை சரியாக வழங்கப்படுகிா எனவும், பதிவேடுகளையும், ஆவணங்களை குன்னம் சட்டப்பரேவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் விளம்பரங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தாா்.
மேலும், பணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகள் ஏதேனும் உள்ளதா என்பதை முறையாகக் கண்காணிக்கவும், பதிவு செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையாகச் சான்றிதழ் வழங்கவும், கட்டணச் செய்திகளைக் கண்காணித்து அறிக்கை அனுப்பவும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தோ்தல் தொடா்பான தகவல்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



