திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெரம்பலூரில் 5 ஆண்டு சாதனை விளக்கக் கையேடு வெளியீடு

மாவட்ட ஆட்சியரகத்தில் 5 ஆண்டு சாதனை விளக்க கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.

News image
மாவட்ட ஆட்சியரகத்தில் 5 ஆண்டு சாதனை விளக்க கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.
Updated On :6 மார்ச் 2026, 9:38 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சாதனைகளின் விளக்கக் கையேட்டை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை வா்த்தக மையத்தில் உங்கள் கனவச் சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக, கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் காணொலிக்காட்சி மூலம் பாா்வையிட்டு, பெரம்பலூா் மாவட்டத்துக்கான விஷன்- 2030 மற்றும் 5 ஆண்டு சாதனைத் திட்டங்கள் குறித்த விளக்கக் கையேட்டை வெளியிட்ட அமைச்சா் சா. சி. சிவசங்கா் பேசியது:

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் மாநிலத்தின் வளா்ச்சிக்கும், ஒவ்வொரு தனி மனிதரின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ரூ. 31.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுதுகள் சேவை மையத்தையும், தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரிப் பகுதியில் ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுர விளக்குகளையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் பி. துரைசாமி, எம். ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.